ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' |

திரையுலகை சேர்ந்தவர்கள் அவ்வப்போது பல்வேறு விமான பயணங்களை மேற்கொண்டு வந்தாலும் அடிக்கடி இதுபோன்ற பிரபலங்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாவது என்னவோ ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சேவை தான். அந்த வகையில் லேட்டஸ்டாக பிரபல சிதார் இசை கலைஞர் ரவிசங்கரின் மகளான அனோஷ்கா சங்கர் தன்னுடைய சிதார் இசைக்கருவியை ஏர் இந்தியா விமான சேவை சேதப்படுத்தி விட்டது என்று சோசியல் மீடியாவில் ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கிட்டத்தட்ட 1000 விமான பயணங்களில் என்னுடைய உற்ற நண்பனாக பயணித்த இந்த சிதார் கருவியை ஏர் இந்தியா விமான நிறுவனத்தினர் கவனமின்மையுடன் கையாண்டதால் இது உடைந்து சேதம் அடைந்துள்ளது. இத்தனைக்கும் இதன் பாதுகாப்புக்காக சிறப்பு கட்டணம் வேறு செலுத்தி இருந்தேன். இத்தனை வருடங்களில் ஏர் இந்தியாவில் நான் பயணிப்பது இதுதான் முதல் முறை. இந்த முதல் முறையிலேயே இப்படி ஒரு மோசமான அனுபவத்தை எனக்கு ஏர் இந்தியா கொடுத்து விட்டது” இன்று தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் அனோஷ்கா சங்கருக்கு ஆதரவாக ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவைக்கு எதிராக தங்களது கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.