விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
பாலிவுட்டில் ஏற்கனவே இரண்டு பாகங்களாக அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‛ஹேரா பெரி'. மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் 2001ல் முதல் பாகமும், நீரஜ் ஓரா இயக்கத்தில் 2006ல் இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்றன. இந்த இரண்டு பாகங்களிலும் நடிகர்கள் அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது இதன் மூன்றாம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் தான் இயக்குவதாக சொல்லப்படுகிறது. அக்ஷய் குமாரே தயாரிக்கிறார்.
இன்னும் படப்பிடிப்பு துவங்காத நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து தான் விலகி உள்ளதாக நடிகர் பரேஷ் ராவல் அறிவித்தார். இதனை தொடர்ந்து அவர் மீது 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் தயாரிப்பாளரான அக்ஷய் குமார். பதிலுக்கு தனது வழக்கறிஞர் மூலமாக தயாரிப்பாளரான அக்ஷய் குமாருக்கு இது குறித்து விளக்கம் அளித்து பதில் நோட்டீஸ் அனுப்பினார். அதன்பிறகு அது பற்றிய பரபரப்பு அமுங்கிய நிலையில் தற்போது இவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டு நடிகர் பரேஷ் ராவல் இந்த படத்தில் நடிக்க மீண்டும் ஒப்புக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியிலும் கூட, “நான் சினிமாவில் அரசியலை ஒருபோதும் விரும்பாதவன். தென்னிந்தியாவில் தான் வசிக்கிறேன். கூப்பிடும் போது சென்று நடித்துவிட்டு வருவேன். என்னைப் பற்றி சிறிய சர்ச்சை கூட சினிமாவில் இருக்காது. அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி எல்லோர் மீதும் எனக்கு மிகப்பெரிய மதிப்பு உண்டு” என்று கூறியுள்ளார்.
இப்படி பரேஷ் ராவல் திடீரென படத்தை விட்டு விலகியதும் பின்னர் தற்போது படத்தில் இணைந்துள்ளது குறித்தும் இயக்குனர் பிரியதர்ஷன் கூறும்போது, “அக்ஷய் குமார், பரேஷ் ராவல் சுனில் ஷெட்டி மூவருமே தாங்கள் ஒன்றாக இணைந்து விவாதித்ததாகவும், அதன்பிறகு இந்த படத்தில் ஒன்றாக நடிக்க விரும்புவதாகவும் என்னிடம் தெரிவித்தார்கள். இவர்களது இந்த முடிவில் வேறு யாருக்கும் எந்த பங்கும் இல்லை. இந்த மூன்று பேருமே அவர்களாகவே ஒன்று சேர்ந்து பேசி தான் இந்த முடிவை எடுத்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.