'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
குஜராத்தில் உள்ள வதோதரா நகரில் சமீபத்தில் ரக்ஷித் சவுரசியா என்கிற இளைஞன் குடித்துவிட்டு மதுபோதையில் 120 கிலோமீட்டர் வேகத்தில் கார் ஓட்டியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கே நின்று கொண்டிருந்த பெண் உள்ளிட்ட ஐந்து பேர் மீது மோதியது. இதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த இளைஞன் காரில் உள்ள ஏர்பேக் உதவியால் காயம் இன்றி தப்பித்தான். அதே சமயம் மோதி நின்ற காரில் இருந்து இறங்கிய அவன் இன்னொரு ரவுண்டு போகலாமா என்று கேட்ட வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.
போலீசார் அவனை கைது செய்து விசாரித்ததில் சாலையில் விழுந்து கிடந்த பாட்டில் ஒன்றின் மீது கார் ஏறியதால் அந்த தடுமாற்றத்தில் ஏர்பேக் தானாக விரிந்து தன் முகத்தை மூடி விட்டது என்றும் இதனால் நிலை தடுமாறி இந்த விபத்து ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார். இதற்கு பலரிடமிருந்தும் கண்டனம் வெளிப்பட்டு வரும் நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூரும் தனது கடுமையான கண்டனத்தை தெரியப்படுத்தியுள்ளார். “இந்த நிகழ்வு பயங்கரமானது மட்டுமல்ல.. கோபம் ஏற்படுத்தக் கூடியதும் கூட.. இந்த மாதிரியான நடத்தையினால் போதையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் யாரேனும் தப்பித்து விடலாம் என்று நினைப்பது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.