சமமான சம்பளத்திற்காக குரல் கொடுக்கும் சுதா கொங்கரா! | வேதநாங் ரெய்னா, குஷி கபூரின் 2 வருட காதல் முறிந்ததா? | ரேட்டிங்கிற்குத் தடை வாங்கிய சிரஞ்சீவி படத் தயாரிப்பாளர் | தமன்னா கீ ரோலில் நடித்துள்ள 'ஓ ரோமியோ' ஹிந்தி படம் பிப்.,13ல் ரிலீஸ்! | ஜனவரி 15ல் திரைக்கு வரும் 'திரௌபதி- 2' படத்தின் டிரைலர் வெளியானது! | 'டாக்சிக்' படத்தில் நடிக்க 15 கோடி சம்பளம் வாங்கிய நயன்தாரா? | நடிகைக்கு ஷாக் கொடுத்த டிராகன் நடிகர் | கணவர் நடிகருடன் மல்லுக்கு நிற்கும் மனைவி நடிகை | ரஜினி வசனமும் நானும்! கண்ணா ரவியின் மகிழ்ச்சி | பிளாஷ்பேக்: அரசியல் நய்யாண்டி திரைப்படங்களின் ஆணிவேர் “முகமது பின் துக்ளக்” |

தமிழில் ராக்கி, சாணி காகிதம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் அருண் மாதேஸ்வரன். ஆனால் இந்த படங்கள் எதுவும் கமர்ஷியல் ஆக வெற்றி பெறவில்லை. தனுஷை வைத்து இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கையை படமாக்க இருந்தார். இதற்கான அறிவிப்பு விழா சென்னையில் நடந்த நிலையில் சில பிரச்னையால் இந்த படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹிந்தியில் ஒரு படத்தை இயக்க அருண் மாதேஸ்வரன் முயற்சித்து வந்தார். இதனை சரிதா அஸ்வின் வர்தே என்பவர் ரேவ் ரிவர் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க அக்ஷய் குமாரை சந்தித்து இவர் கதை கூறியுள்ளார். அக்ஷய் குமாருக்கும் கதை பிடித்து போனதால் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.