தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
ஹிந்தி திரையுலகில் ஒரு காலத்தில் காதல் மன்னன் என்று பெயர் பெற்றவர் இம்ரான் ஹாஷ்மி. இவரை 'சீரியல்கிஸ்ஸர்' என்றும் அழைத்தனர். காரணம் இம்ரான் ஹாஷ்மி எல்லா படங்களிலும் நாயகியை உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சிகளில் நடித்தார். தற்போது வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று நடிகர், நடிகைகள் குறித்து ஒரு வரியில் பதில் அளித்தார். ஐஸ்வர்யாராய் என்றதும் 'பிளாஸ்டிக்' என்றார். இது சர்ச்சையானது.
ஐஸ்வர்யா ராயை பிளாஸ்டிக் என்றுஅவதூறாக எப்படி சொல்லலாம் என்று அவரது ரசிகர்கள் இம்ரான் ஹாஷ்மியை கடுமையாக திட்டியும், கண்டித்தும் வலைதளத்தில் பதிவுகள் வெளியிட்டனர்.
இதையடுத்து ஐஸ்வர்யாராயிடம், இம்ரான் ஹாஷ்மி மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஐஸ்வர்யா ராய் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏதோ ஜாலியாக அந்த வார்த்தையை சொல்லிவிட்டேனே தவிர, நானும் ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகன்தான். அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. எனது பேச்சு யாரையேனும் புண்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள்' என்று குறிப்பிட்டு உள்ளார்.