மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் | ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் |

ஹிந்தி திரையுலகில் ஒரு காலத்தில் காதல் மன்னன் என்று பெயர் பெற்றவர் இம்ரான் ஹாஷ்மி. இவரை 'சீரியல்கிஸ்ஸர்' என்றும் அழைத்தனர். காரணம் இம்ரான் ஹாஷ்மி எல்லா படங்களிலும் நாயகியை உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சிகளில் நடித்தார். தற்போது வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று நடிகர், நடிகைகள் குறித்து ஒரு வரியில் பதில் அளித்தார். ஐஸ்வர்யாராய் என்றதும் 'பிளாஸ்டிக்' என்றார். இது சர்ச்சையானது.
ஐஸ்வர்யா ராயை பிளாஸ்டிக் என்றுஅவதூறாக எப்படி சொல்லலாம் என்று அவரது ரசிகர்கள் இம்ரான் ஹாஷ்மியை கடுமையாக திட்டியும், கண்டித்தும் வலைதளத்தில் பதிவுகள் வெளியிட்டனர்.
இதையடுத்து ஐஸ்வர்யாராயிடம், இம்ரான் ஹாஷ்மி மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஐஸ்வர்யா ராய் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏதோ ஜாலியாக அந்த வார்த்தையை சொல்லிவிட்டேனே தவிர, நானும் ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகன்தான். அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. எனது பேச்சு யாரையேனும் புண்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள்' என்று குறிப்பிட்டு உள்ளார்.