பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசும் விசாரிக்கப்பட்டு வருகிறார். குறிப்பாக ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் விலையுயர்ந்த பொருட்கள் பரிசளித்ததாக வாக்கு மூலம் அளித்து இருப்பதால், இந்த வழக்கில் ஏற்கனவே நடிகை ஜாக்குலினிடம் ஐந்து முறை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு இதுவரை தன்னிடம் நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளிலும் தனக்கும் இந்த மோசடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் ஒரு நிரபராதி என்று தொடர்ந்து நடிகை ஜாக்குலின் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.