அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
2024 பார்லிமென்ட் தேர்தல் இந்தியாவில் ஆறு கட்டமாக நடைபெற இருக்கிறது. முதல் கட்டமாக தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் நடைபெறுகிறது. அதேசமயம் வட மாநிலங்களில் வெவ்வேறு கட்டமாக நடைபெறும் தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நிறைவடைகிறது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தன்னுடைய டீப் பேக் வீடியோவை உருவாக்கி காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வருகிறது என குற்றம் சாட்டியுள்ள பாலிவுட் நடிகர் அமீர்கான் மும்பை சைபர் கிரைம் போலீசாரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்து இருக்கிறார். மேலும் தேர்தல் தொடர்பான பல அலுவலர்களுக்கும் இதுகுறித்து புகார் அனுப்பியுள்ளார் அமீர்கான்
அமீர்கான் சின்னத்திரையில் பல வருடங்களாக தொகுத்து வழங்கி பிரபலமான ரியாலிட்டி ஷோவான சத்தியமேவ ஜெயதே என்கிற நிகழ்ச்சியில் இருந்து அவர் பேசுகின்ற அரை நிமிட வீடியோ காட்சியை டீப் பேக் முறையில் உருவாக்கி பாஜகவிற்கு எதிராக பிரச்சார உத்தியாக காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் அமீர்கான். மேலும் கடந்த 35 வருடங்களில், தேர்தலில் மக்கள் ஓட்டளிப்பது குறித்து தேர்தல் கமிஷனுக்கு உதவும் விதமாக தான் பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் எந்த கட்சிக்கும் ஆதரவாக நான் பேசியதும் இல்லை.. வீடியோ வெளியிட்டதும் இல்லை.. இதனை உருவாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.