சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பாலிவுட் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ரோஹித் ஷெட்டி. தொடர்ந்து சல்மான்கான், ஷாரூக்கான், அஜய் தேவ்கன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வரும் ரோஹித் ஷெட்டி, சிங்கம் படத்தின் தொடர் பாகங்களை இயக்கி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர். இந்த நிலையில் ரோஹித் ஷெட்டியும் முதன்முறையாக வெப் சீரிஸ் பக்கம் கவனத்தை திருப்பி இந்தியன் போலீஸ் போர்ஸ் என்கிற வெப் சீரிஸை இயக்கியுள்ளார்.
சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடித்துள்ள இந்த வெப் சீரிஸில் விவேக் ஓபராய் முக்கிய வேடத்தில் நடிக்க, கதாநாயகியாக ஷில்பா ஷெட்டி ஒரு போலீஸ் கமாண்டோவாக நடித்துள்ளார். இவரது கதாபாத்திரத்தில் ஒரு ஆச்சரியம் இருப்பதாக தற்போது கூறியுள்ளார் இயக்குனர் ரோஹித் ஷெட்டி.
அதாவது இந்த கதாபாத்திரத்தை முதலில் ஒரு ஹீரோ நடிப்பதாகத்தான் உருவாக்கி இருந்தாராம் ரோஹித் ஷெட்டி. ஆனால் எதற்காக வழக்கமாக கதாநாயகர்களையே நடிக்க வைக்க வேண்டும் என நினைத்த ரோஹித் ஷெட்டி. அப்படியே கதாநாயகி நடிக்கும் விதமாக மாற்றி விட்டார்.
அப்படி மாற்றியதுமே அதற்கு தோதாக ஷில்பா ஷெட்டி தான் அவரது மனதில் பளிச்சிட, அவர் எதிர்பார்த்தபடியே தற்போது இந்த வெப் சீரிஸில் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் ஷில்பா ஷெட்டி. மேலும் இயக்குனர் ரோஹித் ஷெட்டி கூறும்போது பாலிவுட்டில் போலீஸ் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு என இரண்டு கதாநாயகிகள் மட்டுமே உள்ளனர். அதில் ஒருவர் ஷில்பா ஷெட்டி என்று கூறியுள்ளார்.