பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் நடித்த அனிமல் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கினார். கடந்த 1ம் தேதி வெளிவந்தது. படத்தில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் ஆபாச காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும் படம் வசூலை குவித்து வருகிறது. ஆயிரம் கோடியை தொட்டு விடும் என்கிறார்கள்.
இந்த நிலையில் அனிமல் படத்தின் அடுத்த பாகம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி 'அனிமல் பார்க்' என்ற பெயரில் இதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் ரன்பீர் கபூர் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்துடன் சந்தீப் ரெட்டி வங்காவுடன் மேலும் இணைந்து அல்லு அர்ஜூன் நடிக்கும் ஒரு படத்தையும் தயாரிக்க இருப்பதாக டி சீரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டி சீரிஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது : “நம்பிக்கையின் அடிப்படையிலான இந்த கூட்டணி, ஆக்கபூர்வமான சுதந்திரத்தால் தூண்டப்படுகிறது. தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்த சினிமா அதிசயங்களை நிகழ்த்த இருக்கின்றனர். அவை பிரபாஸின் ஸ்பிரிட், அனிமல் பார்க், மற்றும் அல்லு அர்ஜுன் திரைப்படம் ஆகியவையாகும். 'கபீர் சிங்' (அர்ஜூன் ரெட்டியின் பாலிவுட் பதிப்பு) மற்றும் அனிமல் ஆகிய திரைப்படங்களின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து அடுத்த அத்தியாயங்கள் தயாராகின்றன” என்று அறிவித்துள்ளது.