ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சல்மான்கான், கத்ரினா கைப் நடித்த 'டைகர் 3' படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இதனால் சல்மான் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகிறார்கள். இதன் உச்சபட்சமாக மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற ஊரில் படம் தொடங்கியதும் தியேட்டருக்குள் சரமாரியாக பட்டாசை கொழுத்தினார்கள்.
இதனால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தார்கள். பெண்கள் உள்ளிட்ட சிலர் கீழே விழுந்து காயம் அடைந்தார்கள். தியேட்டர் முழுவதும் புகை மூட்டத்தால் சிலருக்கு மூச்சு திணறியது. இதனால் அந்த காட்சி ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து சல்மான்கான் தனது டுவிட்டரில் வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அதில், “தியேட்டருக்குள் பட்டாசு வெடிப்பது ஆபத்தானது. நமக்கும், பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தாமல் படத்தை பார்த்து ரசியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியிருக்கிறார்.