ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

புதிய படங்கள் வெளிவரும்போது வெளியாகும் அன்றே அந்த படங்கள் ஹெச்டி தரத்தில் இணையதளங்களில் வெளியாகின்றன. கடுமையான சட்டங்கள் இருந்தும் இதனை தடுக்க முடியவில்லை. இதனால் சினிமாத்துறைக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அரசுக்கு வர வேண்டிய பல கோடி ரூபாய் வரியும், வராமல் போகிறது. இதன் காரணமாக தீவிரமான நடவடிக்கை எடுக்க விரும்பிய மத்திய அரசு சினிமாட்டோகிராப் திருத்த சட்டம் 2023ஜ நிறைவேற்றியது.
தற்போது இதனை தீவிரமாக கண்காணிக்கவும், தீவிரப்படுத்தவும் 12 கண்காணிப்பு அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது. இது குறித்து தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியிருப்பதாவது: யூ-டியூப், டெலிகிராம், இணையம் மற்றும் ஆன்லைன் தளங்களில் தங்கள் சினிமா திருட்டுத்தனமாக ஒளிபரப்பாவதை தயாரிப்பாளர் புகார் செய்தால் 48 மணி நேரத்தில் கண்காணிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். அவ்வாறு படத்தை திருட்டுத்தனமாக ஒளிபரப்பு செய்தவர்களுக்கு 3 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறையும், 3 லட்சம் முதல் படத்தின் தயாரிப்பு செலவில் 5 சதவீத தொகை வரையும் அபராதம் விதிக்கப்படும். என்றார்.