என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழில் வெளிவந்த 'நான் ராஜாவாக போகிறேன்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர் ஜரீன் கான். ஏராளமான பாலிவுட் படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு கோல்கட்டாவில் நடந்த துர்கா பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்கவும், நடனம் ஆடவும் ஜரீன் கானுக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியும் பல லட்சம் செலவு செய்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கடைசி நேரத்தில் மறுத்துவிட்டார் ஜரீன் கான். இது தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள் கோல்கட்டாவின் சீல்டா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஜரீன் கானுக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் ஜரீன் கான் ஒருமுறை கூட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் தற்போது ஜரீன் கானுக்கு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து ஜரீன் கான் கூறும்போது, ''என் மீதான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. விழாவுக்கு முதல் மந்திரி வருவதாக பொய் சொல்லி என்னை அழைத்தனர். அதனால் போகவில்லை. வக்கீலை சந்தித்து பேசிய பிறகு விளக்கம் அளிக்கிறேன்'' என்றார்.