தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் அட்லீ. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் நடிப்பதன் மூலம் நயன்தாரா, விஜய் சேதுபதி யோகிபாபு ஆகியோரும் பாலிவுட்டில் அடி எடுத்து வைத்துள்ளனர். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கிறார் விஜய்சேதுபதி. ஏற்கனவே ரஜினிகாந்த், விஜய், கமல் என முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து விட்ட விஜய் சேதுபதி இப்போது ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்ததன் மூலம் இன்னும் பெரிய அளவில் பிரபலமாகி இருக்கிறார்.
இந்த நிலையில் ஜவான் படத்தில் இவர் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்பு எப்படி கிடைத்தது என தற்போது ஒரு சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் நடந்தபோது அதில் கலந்து கொள்ள நடிகர் ஷாருக்கானும் வந்திருந்தார். அந்த சமயத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா உள்ளிட்டவரிடம் ஜாலியாக உரையாடிக் கொண்டிருந்த விஜய்சேதுபதி, ஷாருக்கானுக்கும் வில்லனாக நடிக்க வேண்டும் என்கிற தனது ஆசையை பேச்சுவாக்கில் கூறியுள்ளார்.
அவரது ஆசை விக்னேஷ் சிவன் மூலமாக அங்கே வந்திருந்த ஷாருக்கானுக்கும் தெரிய வந்ததும் இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே என்று கூறி தனது படத்தில் விஜய்சேதுபதியை வில்லன் ஆக்க கிரீன் சிக்னல் கொடுத்தாராம் ஷாருக்கான். அந்த வகையில் தனது நண்பனின் விருப்பத்தை தனது திருமண தினத்தன்று நிறைவேற்றி கொடுத்து விட்டார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.