ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுட்டேலா, ஹிந்தி மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் தமிழ் என தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தமிழில் வெளியான லெஜெண்ட் படத்தில் அண்ணாச்சி சரவணனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் இளம் நடிகர் அகிலுக்கு ஜோடியாக ஏஜென்ட் என்கிற படத்தில் நடித்துள்ளார் ஊர்வசி ரவுட்டேலா. இந்த படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் சினிமா விமர்சகர் ஒருவர், ஏஜென்ட் படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடைபெற்றபோது நாயகன் அகில், ஊர்வசி ரவுட்டேலாவை துன்புறுத்தினார் என்றும், அகில் பக்குவம் இல்லாத நடிகர் என்றும் அவருடன் பணியாற்றுவது வசதி குறைவாக இருந்தது என்று ஊர்வசி ரவுட்டேலா கூறியதாகவும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் அந்த நபர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு ஊர்வசி ரவுட்டேலாவின் கவனத்திற்கு வந்ததும் கோபமான அவர், இது முற்றிலும் தவறான செய்தி என்று கூறியதுடன், அவர்மீது அவதூறு வழக்கு தொடர்ந்து நோட்டிஸ் அனுப்பியுள்ளார். மேலும் அந்த நபர் பற்று ஊர்வசி கூறும்போது, “உங்களுடைய கருத்துக்கள் ரொம்பவே கடுமையாக இருக்கின்றன. நீங்கள் என்னுடைய அதிகாரப்பூர்வமான மக்கள் தொடர்பாளர் அல்ல. உங்களுடைய பக்குவமற்ற செயலால் என்னையும் என்னுடைய குடும்பத்தையும் ரொம்பவே வருத்தப்பட வைத்து விட்டீர்கள் என்று கூறியுள்ளார்.