நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். சல்மான்கானுக்கு ஜோடியாக கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்கிற படத்தில் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகி உள்ளது. இதையடுத்து கடந்த சில வாரங்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார் பூஜா ஹெக்டே.
அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட பூஜா ஹெக்டே, “படப்பிடிப்பு தளத்தில் எல்லோரும் சல்மான்கானை 'பாய்' என்று மரியாதையாக அழைத்ததால் நானும் பாய் என்றே அவரை அழைத்தேன். ஆனால் சல்மான்கான் அப்படி அழைக்க வேண்டாம் என என்னிடம் கூறியதுடன் சல்மான் என்று தன் பெயரை சொல்லியே அழைக்கும்படி கூறினார். ஆனாலும் அது மரியாதையாக இருக்காது என்பதுடன் என்னால் அப்படி கூப்பிடவும் முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் எனக்கும் அவருக்கும் சங்கடம் வராத வகையில் அவரது பெயரை சுருக்கி எஸ்.கே என அவரை அழைக்க ஆரம்பித்தேன்” என்று கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.