சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மும்பையில் உள்ள நடிகர் அமிதாபச்சனின் பங்களாவில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக யாரோ மர்ம நபர் நாக்பூர் காவல் நிலையத்துக்கு தொலைபேசியில் ஒரு அதிர்ச்சி செய்தியை கொடுத்திருக்கிறார். அதையடுத்து நாக்பூர் போலீசார் மும்பை காவல் துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்குள்ள போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் அமிதாப்பச்சனின் வீட்டை சோதனை செய்துள்ளார்கள். ஆனால் இந்த தேடுதல் வேட்டையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லையாம்.
அதைபோல் நடிகர் தர்மேந்திரா வீட்டிலும் வெடிகுண்டு இருப்பதாக இன்னொரு மர்ம போன் காலும் வந்திருக்கிறது. அங்கு நடத்தப்பட்ட சோதனையிலும் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக மும்பை போலீசார் தற்போது அலார்ட்டாகி இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.