அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
வடக்கு டில்லியில் உள்ள கஞ்சவாலா பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய போதை ஆசாமிகள் ஓட்டி வந்த காரில் மோதி 20 வயது அஞ்சலி சிங் பலியானார். இந்த விபத்து கொடூர விபத்தாக மாறியது. மோதிய வேகத்தில் காரின் அடியில் சிக்கிய அஞ்சலி தேவியை 16 கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்றிருக்கிறார்கள். உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார் அஞ்சலி சிங். சம்பந்தப்பட்ட வாலிபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த கொடூர விபத்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அஞ்சலியின் வருமானத்தை நம்பியே அவரது குடும்பம் இருந்திருக்கிறது. இப்போது அவரது குடும்பம் நிர்கதியாகி உள்ளது. இந்த நிலையில் அஞ்சலி சிங் பற்றி கேள்விப்பட்ட ஷாருக்கான் அவரது குடும்பத்திற்கு கணிசமான நிதி உதவி அளித்துள்ளார். ஷாருக்கான் தனது தந்தையின் பெயரில் நடத்தி வரும் மீர் பவுண்டேஷன் மூலம் இந்த நிதியை வழங்கி உள்ளார். எவ்வளவு நிதி என்பதை அவர் அறிவிக்கவில்லை. ஷாருக்கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.