காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

கத்தாரில் தற்போது பிபா கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சியில் ஒரு பாடலுக்கு பிரபல பாலிவுட் நடிகை நோரா பதேஹி என்பவர் நடனமாடினார். அந்த நடனத்தின்போது தன்னிடம் இருந்த இந்திய தேசியக்கொடியை இரண்டு கைகளிலும் பிடித்து பறக்கவிட்டபடி உற்சாகமாக ஜெய்ஹிந்த் என்றும் கத்தினார். இவரது இந்த செயலுக்கு பலரிடமிருந்து வரவேற்பு கிடைத்தாலும் இந்த நிகழ்வில் அவர் எதிர்பாராமல் செய்த ஒரு விஷயம் தற்போது அவருக்கு எதிராக திரும்பி சர்ச்சையை கிளப்பிவிட்டது.
அதாவது இந்த நடனத்தின் போது அவர் நமது தேசியக்கொடியை தலைகீழாக காட்டினார். அதுமட்டுமல்ல அவர் அந்த தேசிய கொடியை வாங்கியபோது கீழே இருந் ஒருவர் அதை தூக்கிப்போட நோரா பதேஹி அதை பிடிப்பதற்குள் கீழே விழுந்தது. இவற்றை குறிப்பிட்டு பலரும் நோரா பதேஹி, நமது தேசியக்கொடியை அவமதித்து விட்டார் என கூறி கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அதேசமயம் அந்த கொடியை அவர் முதலில் நேராக பிடித்திருந்ததும் கொடியை சுழற்றியபோது அவரை அறியாமலேயே அது தலைகீழாக மாறியதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. இதை பதிவிட்டுள்ள சிலர் நோரா பதேஹிக்கு உள்ள தேசிய உணர்வை மட்டுமே நாம் கருத்தில் கொண்டு அவரை பாராட்ட வேண்டுமே தவிர, அந்த விழா மேடையில் ஏதோ ஒரு பதட்டத்தில் அவர் தன்னையறியாமல் தவறுதலாக செய்த ஒரு விஷயத்தை பூதாகரப்படுத்தி அவரை அவமதிக்க கூடாது என்று ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




