நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இந்திய சினிமாவின் அடையாளமாக பார்க்கப்படுகிறார். அவரது குரலில் பல விளம்பரங்கள் வெளிவந்துள்ளது. அவர் நடத்துவது போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பல விளம்பரங்களில் அவரது அனுமதி இன்றி அவரது படம் பயன்படுத்தப்படுகிறது. அவர் பெயரில் நூற்றுக் கணக்கான இணைய தளங்கள் இருக்கிறது.
இந்த நிலையில் அமிதாப் பச்சன் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் ஹரீஷ் சால்வே, பிரவீன் ஆனந்த் ஆகியோர் டில்லி உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், அமிதாப் பச்சன் பெயரைப் பயன்படுத்தி, லாட்டரி சீட்டு நடைபெறுகிறது. போலியாக குரோர்பதி நிகழ்ச்சியை நடத்துகின்றனர். உடைகள், சுவரொட்டிகளில் அவர் புகைப்படங்களைப் பயன்படுத்துகின்றனர். அமிதாப் பச்சன் வீடியோ கால் என்ற போலி மொபைல் ஆப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அமிதாப் பச்சன் பெயர், புகைப்படம், குரல் ஆகியவற்றை வணிக நோக்கத்துக்காக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதனை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா அமிதாப் பச்சன் அனுமதியின்றி அவர் பெயர், குரல், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.