சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
மாடல் அழகிகளை ஆபாச படம் எடுத்து விற்றதாக எழுந்த புகாரின் பேரில் நடிகை ஷில்பா ஷெட்டி கணவரான ராஜ் குந்த்ராவை கடந்த ஜூலை 19ம் தேதி மும்பை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் நடிகைகள் பூனம் பாண்டே, ஷெர்லின் சோப்ராவுக்கு தொடர்பிருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் ஆபாச படங்களுக்கென தனி மொபைல் ஆப் உருவாக்கி அதில் ஆபாச படங்களை ராஜ் குந்த்ரே பதிவிட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணை ஓராண்டுக்கு மேலாக நடந்து வந்த நிலையில், தற்போது மும்பை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்கள். 450 பக்கங்கள் கொண்ட இதில், பைவ் ஸ்டார் ஹோட்டலில் ஆபாச படங்கள் எடுக்கப்பட்டு அவை ராஜ் குந்த்ராவின் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு மொபைல் ஆப்புகள் மூலம் வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக ராஜ் குந்த்ரா நிறுவனம் குறிப்பிட்ட தொகையை வசூல் செய்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஷெல்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனபோதிலும் அவர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருப்பதோடு, வியாபார போட்டி காரணமாக தன்னை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளார்கள் என்று தனது தரப்பில் அவர் வாதம் செய்து வருவதாகவும் மும்பை போலீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளன.