இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் |
பாலிவுட் நடிகரும் யூடியூப் விமர்சகருமான கமால் ரஷீத் கான் என்பவர் பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல், மோகன்லால், ரஜினி, அஜித் என தென்னிந்திய முன்னணி நடிகர்களையும் அவர்களது படங்கள் வெளியாகும் சமயத்தில் கிண்டலடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த இவர் தற்போது மோகன்லால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரிஷ்யம்-2 படம் குறித்து கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
இந்தப்படம் பற்றி அவர் கூறும்போது, “பயங்கரம்.. சோனி டிவியில் ஒளிபரப்பாகும் சிஐடி மூசா தொடர் இந்த படத்தை விட நூறு மடங்கு சிறப்பாக இருக்கிறது” என்று கிண்டல் அடித்துள்ளார். கடந்த வருடம் வெளியான திரிஷ்யம்-2 படத்தை இப்போது ஏன் இவர் தேவையில்லாமல் விமர்சித்து சர்ச்சையை கிளப்புகிறார் என்றால், அதற்கு காரணம் அஜய்தேவ்கன் தான்.
ஆம்.. திரிஷ்யம் 2 படத்தின் ஹிந்தி ரீமேக் வெளியாகி உள்ளது. இதில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா, தபு என இதன் முதல் பாகத்தில் நடித்த நட்சத்திரங்களே மீண்டும் இதில் இடம் பெற்றுள்ளனர். நேரடியாக ஹிந்தியில் வெளியாகி உள்ள திரிஷ்யம்-2 படத்தை விமர்சித்தால் தனக்கு சிக்கல் வருமென நினைத்து, மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் 2 படத்தை தாக்குவது போல இப்படி செய்தி வெளியிட்டுள்ளார் கமால் கான்.
இரண்டும் ஒரே கதைதான் என்பதால் மோகன்லால் படத்தை மட்டமாக விமர்சித்தால் ரசிகர்கள் அதை புரிந்துகொண்டு இந்தியில் வெளியாகியுள்ள திரிஷ்யம்-2 படத்தை பார்க்காமல் புறக்கணிப்பார்கள் என்கிற எண்ணத்தில் இவ்வாறு சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார் கமால் ரஷீத் கான்.