தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் |
ஹிந்தியில் சீனிகம், பா, ஷமிதாப் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் பால்கி. தற்போது துல்கர் சல்மானை வைத்து ஹிந்தியில் 'சுப்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். பாலிவுட் நடிகர் சன்னி தியோல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரிவெஞ்ச் ஆர்டிஸ்ட் என்கிற டேக்லைனுடன் சைக்காலஜிக்கல் திரில்லர் ஆக இந்தப் படம் உருவாகி வருகிறது. இது துல்கர் சல்மான் ஹிந்தியில் நடிக்கும் அவரது மூன்றாவது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க துல்கர் சல்மானை ஏன் தேர்வு செய்தேன் என்பது குறித்து கூறியுள்ளார் பால்கி.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த நாட்டில் பாதிப்பேருக்கு தெரிந்த சிறந்த திறமையான நபராக, ஒரு சூப்பர்ஸ்டார் முகமாக இருக்க வேண்டும். அதேபோன்று இன்னும் நாட்டில் இருக்கும் பாதிப்பேருக்கு ஒரு புதிய கண்டுபிடிப்பாக தெரிய வேண்டும். அதே சமயம் தனது தாய் மொழியைப் போலவே ஹிந்தியில் நன்கு பேச தெரிந்தவராக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஹிந்தி சினிமாவுக்கு ஒரு புதுமுகம் ஆகவே இருக்க வேண்டும். இதற்கெல்லாம் துல்கர் சல்மான் தான் சரியாக பொருந்தி வந்தார். கொரோனா காலகட்டத்தில் அவரிடம் ஜூம் கால் வழியாகத்தான் பேசினேன். ஆனால் அவர் முழு கதையையும் கேட்கவே இல்லை. உடனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்” என்று கூறியுள்ளார்.