ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

ஹிந்தியில் சீனிகம், பா, ஷமிதாப் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் பால்கி. தற்போது துல்கர் சல்மானை வைத்து ஹிந்தியில் 'சுப்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். பாலிவுட் நடிகர் சன்னி தியோல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரிவெஞ்ச் ஆர்டிஸ்ட் என்கிற டேக்லைனுடன் சைக்காலஜிக்கல் திரில்லர் ஆக இந்தப் படம் உருவாகி வருகிறது. இது துல்கர் சல்மான் ஹிந்தியில் நடிக்கும் அவரது மூன்றாவது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க துல்கர் சல்மானை ஏன் தேர்வு செய்தேன் என்பது குறித்து கூறியுள்ளார் பால்கி.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த நாட்டில் பாதிப்பேருக்கு தெரிந்த சிறந்த திறமையான நபராக, ஒரு சூப்பர்ஸ்டார் முகமாக இருக்க வேண்டும். அதேபோன்று இன்னும் நாட்டில் இருக்கும் பாதிப்பேருக்கு ஒரு புதிய கண்டுபிடிப்பாக தெரிய வேண்டும். அதே சமயம் தனது தாய் மொழியைப் போலவே ஹிந்தியில் நன்கு பேச தெரிந்தவராக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஹிந்தி சினிமாவுக்கு ஒரு புதுமுகம் ஆகவே இருக்க வேண்டும். இதற்கெல்லாம் துல்கர் சல்மான் தான் சரியாக பொருந்தி வந்தார். கொரோனா காலகட்டத்தில் அவரிடம் ஜூம் கால் வழியாகத்தான் பேசினேன். ஆனால் அவர் முழு கதையையும் கேட்கவே இல்லை. உடனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்” என்று கூறியுள்ளார்.




