மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு | டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? | ஒருங்கிணைந்து செயல்படுவோம் : தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு | அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள், ஆனாலும்…. | புதிய தொழிலாளர் சங்கத்திற்கு ஆள் சேர்க்கும் தயாரிப்பாளர் சங்கம் | பிளாஷ்பேக் : நடிகையாக இருந்து டப்பிங் கலைஞராக மாறியவர் | பிளாஷ்பேக்: விஸ்வாமித்ரரை காப்பாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன் |
பாலிவுட் நடிகர் அமீர்கான் தயாரித்து நடித்து கடந்த 11ம் தேதி திரைக்கு வந்த படம் லால் சிங் தத்தா . இந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாதால் பலத்த அதிர்ச்சி அடைந்திருக்கிறார் அமீர்கான். இந்தநிலையில், இப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் சிலர் வெளியிட்டு வந்துள்ளார்கள். இதுகுறித்து வயாகாம் 18 நிறுவனம் பெங்களூரில் உள்ள பனஸ்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், பெங்களூரில் உள்ள ஓரியண்ட் மாலில் இருந்து லால் சிங் தத்தா படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களிடமிருந்து கம்ப்யூட்டர் மற்றும் கருவிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளார்கள் . அந்த நபர்களிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்ற செய்வதற்காக அவர்கள் ஒரு குழு அமைத்திருப்பதையும் அறிந்து கொண்ட போலீசார், மீதமுள்ள நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.