இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' | செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது | பிளாஷ்பேக் : இளையராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்த நதியா, பாசில் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா | 'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம் | அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு | பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் |
டில்லியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மனைவியை மிரட்டி ரூ. 215 கோடி பணம் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கடந்த ஆண்டில் கைது செய்தனர். அவரிடத்தில் நடத்திய விசாரணையில் தொழிலதிபரின் மனைவியை மிரட்டி பறித்த பணத்தைக் கொண்டு தான் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாகவும், பாலிவுட் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, இலங்கையை சேர்ந்த பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டசுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்திருக்கிறார் சுகேஷ். அப்போது அவருக்கு கோடிக்கணக்கில் பரிசுகளையும் அவர் வழங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அதன்பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது சுகேஷிடம் தான் பெற்ற பரிசுகள் குறித்த தகவல்களை தெரிவித்தார். அதையடுத்து ஜாக்குலினுக்கு சொந்தமான 7.27 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கடந்த ஏப்ரல் மாதம் முடக்கப்பட்டது.
இந்தநிலையில் அந்த வழக்கு தொடர்பான குற்ற பத்திரிக்கையை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று தாக்கல் செய்துள்ளார்கள். அதில், சுகேஷ் மட்டுமின்றி தொழில் அதிபரின் மனைவியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் குற்றவாளியாக முடிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளார்.