தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் |
ஹிந்தித் திரையுலகத்தின் முக்கியமான ஹீரோக்களில் முதன்மையானவர் ஆமீர்கான். அவர் நடித்து வெளிவரும் படங்கள் எப்போதுமே வித்தியாசமான படங்களாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை பாலிவுட் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால், அவருடைய கடைசி இரண்டு படங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்து அந்த நம்பிக்கையை குலைத்துவிட்டது.
ஆமீர்கான் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'லால் சிங் சத்தா' படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியைத் தழுவியுள்ளது. படத்திற்கு எதிர்பார்த்த வசூல் இல்லை என்பது உண்மை. படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன பின்னும் வசூலில் 50 கோடியைத் தாண்டவில்லை. ஆமீர்கான் நடித்து நான்கு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' படமும் தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
பட வெளியீட்டிற்கு முன்பாக முக்கிய ஊர்களுக்குச் சென்று படத்திற்கு புரமோஷன் செய்தார் ஆமீர்கான். ஆனால், பட வெளியீட்டிற்குப் பின் கிடைத்த மோசமான வரவேற்பால் அவர் தற்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டாராம். மும்பை மீடியாவைச் சேர்ந்தவர்கள் அவரைத் தொடர்பு கொண்டால் தொலைபேசியை எடுப்பதில்லையாம்.
அதே சமயம் படத்தின் மூலம் எந்த நஷ்டமும் இல்லை என படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படத்திற்காக ஆமீர்கான் எந்த சம்பளமும் வாங்கவில்லை என்கிறார்கள். எந்த நஷ்டம் வந்தாலும் அதில் பங்கெடுப்பேன் என அவர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார் என்றும் தகவல்.