7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

சமீபகாலமாக தென்னிந்திய திரையுலகில் பான் இந்தியா என்கிற வார்த்தை அதிகமாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக தெலுங்கு இளம் முன்னணி நடிகர்கள் அனைவருமே பான் இந்திய படங்களில் நடிக்க ரொம்பவே ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதேசமயம் இவர்களிலிருந்து நடிகர் மகேஷ்பாபு சற்றே வித்தியாசப்பட்டு, எனக்கு தெலுங்கு திரையுலகில் நடித்தாலே போதுமானது என சமீபத்தில் கூறினார்.. இது உடனடியாக பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு விளக்கம் அளித்து இன்னொரு நிகழ்ச்சியில் மகேஷ்பாபு பேசியபோது பாலிவுட் திரை உலகத்தால் என்னை வாங்க முடியாது என்கிற அர்த்தம் தரும் வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். தற்போது அவர் பேசிய வார்த்தைகளை வைத்து பாலிவுட் திரையுலகில் ஒரு விவாதமே ஆரம்பித்துள்ளது. குறிப்பாக முன்னணி தயாரிப்பாளர்களான போனிகபூர், மகேஷ் பட் ஆகியோர் மகேஷ்பாபுவின் இந்த கருத்துக்கு தங்களது பதில் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போனிகபூர் கூறும்போது, “ஒவ்வொருவருக்கும் அவர்களது கருத்துக்களைக் கூறுவதற்கு உரிமை இருக்கிறது. அதேசமயம் ஒரு குறிப்பிட்ட திரையுலகை பற்றி மட்டும் தனியாக கமெண்ட் செய்ய முடியாது. ஏனென்றால் அவர் பாலிவுட், தென்னிந்திய சினிமா என இரண்டு தரப்புக்கும் சொந்தமானவர் தான்.. ஏற்கனவே தெலுங்கு மட்டுமல்லாது தமிழிலும் நடித்தது அவருக்கு ஞாபகம் இருக்கலாம். இதேபோல மலையாளத்திலும் கன்னடத்திலும் கூட அவர் விரைவில் படங்கள் நடிக்கலாம். அதனால் இதுபோன்ற கருத்துக்களை சொல்வதற்கு அவர் சரியான நபர் அல்ல' என்று கூறியுள்ளார்.
பிரபல தயாரிப்பாளரும் நடிகை ஆலியா பாட்டின் தந்தையுமான மகேஷ் பட், மகேஷ்பாபுவின் கருத்து குறித்து கூறும்போது, 'ஒருவேளை தான் கேட்கும் சம்பளத்தை கொடுத்து அவரை இந்தியில் நடிக்க வைக்க முடியாது என்பது போன்ற அவர் சொல்லியிருந்தால் அது சரியானதுதான் நான்.. அவருக்கு ஆல் த பெஸ்ட் சொல்கிறேன்.. ஒருவேளை பாலிவுட் திரையுலகம் அவரது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற மாதிரி வேலை செய்ய முடியாது என அவர் நினைத்தால், அதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.. ஒவ்வொருவருக்கும் அவர்களது சொந்த திரையுலகம் தான் இருக்கிறதே..” என்று கூறியுள்ளார்.