14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
ஹிந்தித் திரையுலகில் இந்த ஆண்டில் வெளியான டப்பிங் படங்களான 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' இரண்டு படங்களுமே அங்கு 300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்தது. நேரடி ஹிந்திப் படங்களைக் காட்டிலும் இந்தப் படங்கள் அதிக வசூலைப் பெற்றது.
இந்நிலையில் நேற்று வெளியான ஹிந்திப் படங்களான 'ரன்வே 34, ஹீரோபன்ட்டி 2' ஆகிய படங்கள் முதல் நாள் வசூலில் திண்டாடி உள்ளன. அஜய் தேவ்கன் இயக்கத்தில் அமிதாப், அஜய் தேவ்கன், ரகுல் ப்ரீத் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் முதல் நாளில் 3 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாம்.
அகமது கான் இயக்கத்தில், டைகர் ஷராப், நவாசுதீன் சித்திக், தாரா சுடாரியா மற்றும் பலர் நடித்த 'ஹீரோபன்ட்டி 2' படம் 8 கோடி வசூலை வசூலித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், நேற்று மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்த 'கேஜிஎப் 2' படம் ஹிந்தியில் மட்டும் 4 கோடி வசூலித்துள்ளதாம்.
சமீபத்தில் ஹிந்திதான் தேசிய மொழி என்று பேசி சர்ச்சையில் சிக்கினார் அஜய் தேவகன். 'ஹீரோபன்ட்டி 2' பட நடிகரான நவாசுதீன் சித்திக் தான் தென்னிந்தியப் படங்களைப் பார்ப்பதில்லை என்று புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆனால், இவர்களிருவரின் படங்களும் முதல் நாளிலேயே குறிப்பிடத்தக்க வசூலைப் பெறவில்லை என்பது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.