காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
ஹிந்தித் திரையுலகில் இந்த ஆண்டில் வெளியான டப்பிங் படங்களான 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' இரண்டு படங்களுமே அங்கு 300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்தது. நேரடி ஹிந்திப் படங்களைக் காட்டிலும் இந்தப் படங்கள் அதிக வசூலைப் பெற்றது.
இந்நிலையில் நேற்று வெளியான ஹிந்திப் படங்களான 'ரன்வே 34, ஹீரோபன்ட்டி 2' ஆகிய படங்கள் முதல் நாள் வசூலில் திண்டாடி உள்ளன. அஜய் தேவ்கன் இயக்கத்தில் அமிதாப், அஜய் தேவ்கன், ரகுல் ப்ரீத் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் முதல் நாளில் 3 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாம்.
அகமது கான் இயக்கத்தில், டைகர் ஷராப், நவாசுதீன் சித்திக், தாரா சுடாரியா மற்றும் பலர் நடித்த 'ஹீரோபன்ட்டி 2' படம் 8 கோடி வசூலை வசூலித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், நேற்று மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்த 'கேஜிஎப் 2' படம் ஹிந்தியில் மட்டும் 4 கோடி வசூலித்துள்ளதாம்.
சமீபத்தில் ஹிந்திதான் தேசிய மொழி என்று பேசி சர்ச்சையில் சிக்கினார் அஜய் தேவகன். 'ஹீரோபன்ட்டி 2' பட நடிகரான நவாசுதீன் சித்திக் தான் தென்னிந்தியப் படங்களைப் பார்ப்பதில்லை என்று புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆனால், இவர்களிருவரின் படங்களும் முதல் நாளிலேயே குறிப்பிடத்தக்க வசூலைப் பெறவில்லை என்பது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.