அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல் | பாவனா தயாரிக்கும் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் அனிமல் பட இசையமைப்பாளர் | போதை வழக்கில் முன்ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | 'ஆலப்புழா ஜிம்கானா' படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன் | மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் | ஓடிடி.,க்கு அதிக விலைக்கு போன டாப் தமிழ் படங்கள் | 20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! |
ஹிந்தித் திரையுலகில் இந்த ஆண்டில் வெளியான டப்பிங் படங்களான 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' இரண்டு படங்களுமே அங்கு 300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்தது. நேரடி ஹிந்திப் படங்களைக் காட்டிலும் இந்தப் படங்கள் அதிக வசூலைப் பெற்றது.
இந்நிலையில் நேற்று வெளியான ஹிந்திப் படங்களான 'ரன்வே 34, ஹீரோபன்ட்டி 2' ஆகிய படங்கள் முதல் நாள் வசூலில் திண்டாடி உள்ளன. அஜய் தேவ்கன் இயக்கத்தில் அமிதாப், அஜய் தேவ்கன், ரகுல் ப்ரீத் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் முதல் நாளில் 3 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாம்.
அகமது கான் இயக்கத்தில், டைகர் ஷராப், நவாசுதீன் சித்திக், தாரா சுடாரியா மற்றும் பலர் நடித்த 'ஹீரோபன்ட்டி 2' படம் 8 கோடி வசூலை வசூலித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், நேற்று மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்த 'கேஜிஎப் 2' படம் ஹிந்தியில் மட்டும் 4 கோடி வசூலித்துள்ளதாம்.
சமீபத்தில் ஹிந்திதான் தேசிய மொழி என்று பேசி சர்ச்சையில் சிக்கினார் அஜய் தேவகன். 'ஹீரோபன்ட்டி 2' பட நடிகரான நவாசுதீன் சித்திக் தான் தென்னிந்தியப் படங்களைப் பார்ப்பதில்லை என்று புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆனால், இவர்களிருவரின் படங்களும் முதல் நாளிலேயே குறிப்பிடத்தக்க வசூலைப் பெறவில்லை என்பது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.