இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஹிந்தியில் சர்க்கஸ், பைட்டர், பதான் மற்றும் தெலுங்கில் ப்ராஜெக்ட் கே என பல படங்களில் நடித்து வருகிறார் தீபிகா படுகோனே. அதோடு ஹாலிவுட் படங்களிலும் அவர் நடி த்திருப்பதால் உலக அளவில் பிரபலம் ஆகிவிட்டார். இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் எட்டு நடுவர் குழு உறுப்பினர்களில் தீபிகா படுகோனேவும் ஒருவராக இடம் பிடித்துள்ளார். கேன்ஸ் 2022 ஜூரிக்கு பிரெஞ்சு நடிகர் வின்சென்ட் லிண்டன் தலைமை தாங்குவார். இவர்கள் தவிர மேலும் 7 பிரபலங்கள் நடுவர்களாக இணைந்துள்ளனர். மே 17 முதல் 28 வரை இந்த பட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஜூரி உறுப்பினராக இருந்த முதல் இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய். தற்போது இந்தப் பெருமை தீபிகா படுகோனேவுக்கும் கிடைத்துள்ளது.