பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
பாலிவுட் நடிகர் ஷாரூக் கானுக்கு, தமிழ் கலாசாரத்தின் மீது, அப்படி என்ன ஆர்வம் என்று தெரியவில்லை. தன்னுடைய படங்களில், தமிழ் வாசம் வீசும் வகையிலான காட்சிகளை அமைப்பதில், ஆர்வம் காட்டி வருகிறார். "ஓம் சாந்தி ஓம் என்ற படத்தில், தமிழ் நடிகர்களை போல் நடித்திருந்தார்.இதன்பின், ரா ஒன் படத்திலும், தென் மாநிலத்துக்காரராக நடித்திருந்தார். இப்போது, தீபிகா படுகோனேயுடன் நடிக்கும், "சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலும், தமிழ் கலாசாரத்தை தொட்டிருக்கிறார். இதில் அவர், வடமாநிலத்தை சேர்ந்தவராகவும், ஹீரோயின் தீபிகா, ராமேஸ்வரத்தை சேர்ந்த பெண்ணாகவும் நடித்துள்ளனராம். ராமேஸ்வரத்திலிருந்து, மும்பைக்கு வரும் தீபிகா, ஷாருக் கானை சந்திப்பதும், இதற்கு பின், இருவருக்கும் ஏற்படும் காதலும் தான், படத்தின் கதையாம்.