முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் | 20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் |
2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் தற்போது பெங்களூருவில் நடந்து வருகிறது. 10 அணிகளுக்கான கிரிக்கெட் வீரர்களின் ஏலம் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகத்தினரும் கலந்து கொண்டுள்ளார்கள். நெருங்கிய நண்பர்களான பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், நடிகை ஜுகி சாவ்லா ஆகியோரும் கோல்கட்டா அணியில் பங்குதாரர்கள்.
ஒவ்வொரு வருட ஏலத்திலும் கடந்த சில வருடங்களாக கோல்கட்டா அணி சார்பாக ஜுகி சாவ்லாவின் மகள் ஜானவி மேத்தா கலந்து கொண்டுள்ளார். இந்த வருட ஏலத்தில் நடிகர் மகள் சுஹானா கான் மற்றும் மகன் ஆர்யன் கான் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். கடந்த வருடம் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்று பின் ஜாமீனில் வெளிவந்தவர் ஆர்யன் கான்.
ஜானவி, ஆர்யன், சுஹானா ஆகியோர் ஏலம் குறித்து விவாதிக்கும் புகைப்படங்களை கோல்கட்டா அணி நிர்வாகம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. இன்றைய ஏலத்தில் ஷாரூக் வாரிசுகள் கலந்து கொண்டுள்ளதால் இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் கோல்கட்டா அணி சார்பாக வீரர்களை ஊக்குவிக்க அப்பா ஷாரூக்குடன் அவர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கலாம்.