ஆஸ்கர் விருதுக்கு சென்ற படத்திற்கு இந்தியாவில் தடை | சிவாஜியின் அன்னை இல்லம் எனக்கே சொந்தம்: நீதிமன்றத்தில் பிரபு மனு | பிளாஷ்பேக்: பாகவதர் நடிக்காததால் தோல்வி அடைந்த படம் | ஹார்டிஸ்க் ஒப்படைப்பு: தீர்ந்தது சோனா பிரச்னை | ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் |
நடிகர் ஷாரூக்கான், தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால், இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. ஆர்யன் கான் ஜாமினில் வெளியில் வந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. இந்தப் படத்தில் ஷாரூக்கானுக்கு நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு அடுத்ததாக சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் உள்ளிட்டோருடன் பதான் என்ற படத்தில் நடிக்கிறார். இதனையும் முடித்துவிட்டு ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஒரு படத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விக்கி கவுஷன், டாப்ஸி, பொமான் ஹிரானி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்குமார் ஹிரானி இந்தியில் 'முன்னாபாய் எம்பிபிஎஸ்', '3 இடியட்ஸ்', 'பிகே' உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.