Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ராஜமவுலியின் தந்தைக்கு சல்மான்கானின் தந்தை கூறிய அறிவுரை

30 டிச, 2021 - 10:42 IST
எழுத்தின் அளவு:
Salim-khan-advice-to-Rajamouli-father

இயக்குனர் ராஜமவுலி படங்களின் கதை உருவாக்கத்தில் எப்போதும் பக்கபலமாக இருந்து வருபவர் அவரது தந்தையும் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத். ராஜமவுலி படங்கள் தவிர இந்தியிலும் பஜ்ரங்கி பைஜான், மணிகர்ணிகா ஆகிய படங்களுக்கும் கதை எழுதியுள்ளார். தற்போது அவரது கதை உருவாக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படம் வெளியாகவுள்ள நிலையில் அந்தப்படத்தின் புரமோஷனுக்காக பேட்டிகள் கொடுத்து வரும் விஜயேந்திர பிரசாத், சல்மான்கான் நடித்த பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதை குறித்த ரகசியம் ஒன்றையும் அந்தப்படத்தின் ஹீரோவாக நடித்த சல்மான்கானின் தந்தை தனக்கு கொடுத்த அறிவுரை பற்றியும் கூறியுள்ளார்.

பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதையை உருவாக்க தூண்டுதலாக அமைந்தது இரண்டு விஷயங்கள் தான்.. ஒன்று மம்முட்டி நடித்து பாசில் இயக்கி மலையாளத்தில் வெளியான பூவின் புதிய பூந்தென்னல் (தமிழில் பூவிழி வாசலிலே) படத்தில் ஆதரவற்ற சிறுமியை காப்பாற்ற போராடும் ஹீரோ என்கிற கான்செப்ட்.. இன்னொன்று பாகிஸ்தானில் இருந்து தங்களது குழந்தையின் மிக காஸ்ட்லியான ஆபரேஷனுக்காக இந்தியா வந்து, இலவச சிகிச்சை மூலம் தங்களது குழந்தையை காப்பாற்றி அழைத்து சென்ற தம்பதியின் கதை.. இந்த இரண்டையும் ஒன்றிணைத்து அதன்மூலம் பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதையை உருவாக்கியதாக கூறியுள்ளார் விஜயேந்திர பிரசாத்.

மேலும் அந்தப்படத்தின் கதை உருவாக்கத்தில் அவர் ஈடுபட்டிருந்த ஆரம்பகட்டத்தில் சல்மான்கானின் தந்தை சலீம்கான் விஜயேந்திர பிரசாத்தை சந்தித்து பேசியுள்ளார். ஏற்கனவே ஷோலே, தீவார் உள்ளிட்ட ஹிட் படங்களின் கதை உருவாக்கத்தில் ஒரு கதாசிரியராக பணியாற்றியவர் தான் சலீம்கான். அதனால் விஜயேந்திர பிரசாத்திடம்.. எக்காரணத்தை கொண்டும் நமக்கான மதிப்பையும் உரிமையையும் விட்டுத்தர கூடாது. படத்தின் நாயகனை விட ஒரு ரூபாயாவது சம்பளம் அதிகம் கேள்.. ஏனென்றால் கதை தான் படத்தின் ஹீரோ என அறிவுரை கூறினாராம்.

அந்த சமயத்தில் பாகுபலி படம் வெளியாகி விஜயேந்திர பிரசாத்துக்கு இந்திய அளவிலான புகழ் அதிகரித்திருந்தது. அதனால் தான் பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதைக்காக விஜயேந்திர பிரசாத்துக்காக நாற்பது லட்சம் சம்பளம் தருவதாக தயாரிப்பாளர்கள் கூறியபோது, அதை ஒரு கோடியாக உயர்த்தினாராம் விஜயேந்திர பிரசாத். இதனால் அதிர்ச்சியான தயாரிப்பாளர்கள் அவரிடம் எண்பது லட்சம் வரை தருவதாக பேரம் பேசியும் அவர் மசியவில்லை. அதன்பிறகு அவர் கேட்டபடியே ஒரு கோடி தரப்பட்டதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதியுடன் படப்பிடிப்பில்  இணைந்த கத்ரினா கைப்விஜய் சேதுபதியுடன் படப்பிடிப்பில் ... 'விக்ரம் வேதா' ஹிந்தி : இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவு 'விக்ரம் வேதா' ஹிந்தி : இரண்டாம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in