சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு டிசம்பர் 27-ந்தேதியான நாளை 56வது பிறந்த நாள் ஆகும். தனது ஒவ்வொரு ஆண்டு பிறந்த நாளின்போதும் தனது பன்வெல் பண்ணை வீட்டில் பிறந்தநாளை கொண்டாடும் சல்மான்கான் அங்குதான் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து வந்தார். அதேபோல் கடந்த கொரோனா தொற்று காலகட்டத்தில் இந்த பண்ணை வீட்டில்தான் அதிகப்படியான நாட்களை கழித்து வந்த சல்மான்கான், அங்கிருந்தபடியே போட்டோஷீட் நடத்தியும் வெளியிட்டு வந்தார்.
இந்தநிலையில் நாளை அவரது பிறந்த நாள் என்பதால் அவரது பன்வெல் பண்ணை வீடு சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று காலை அந்த பண்ணை வீட்டிற்கு சென்றிருந்தபோது சல்மான்கானின் கையில் ஒரு பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அவரை கடித்தது விஷமற்ற பாம்பு என்பது தெரியவந்துள்ளது. என்றாலும் அவருக்கு விஷ எதிர்ப்பு ஊசி செலுத்தப்பட்டு சில மணி நேரம் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதை யடுத்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். அதனால் நாளை நடைபெறும் தனது பிறந்தநாள் நிகழ்ச்சியில் வழக்கம்போல் சல்மான்கான் பங்கேற்பார் என்று தெரியவந்துள்ளது.