விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு டிசம்பர் 27-ந்தேதியான நாளை 56வது பிறந்த நாள் ஆகும். தனது ஒவ்வொரு ஆண்டு பிறந்த நாளின்போதும் தனது பன்வெல் பண்ணை வீட்டில் பிறந்தநாளை கொண்டாடும் சல்மான்கான் அங்குதான் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து வந்தார். அதேபோல் கடந்த கொரோனா தொற்று காலகட்டத்தில் இந்த பண்ணை வீட்டில்தான் அதிகப்படியான நாட்களை கழித்து வந்த சல்மான்கான், அங்கிருந்தபடியே போட்டோஷீட் நடத்தியும் வெளியிட்டு வந்தார்.
இந்தநிலையில் நாளை அவரது பிறந்த நாள் என்பதால் அவரது பன்வெல் பண்ணை வீடு சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று காலை அந்த பண்ணை வீட்டிற்கு சென்றிருந்தபோது சல்மான்கானின் கையில் ஒரு பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அவரை கடித்தது விஷமற்ற பாம்பு என்பது தெரியவந்துள்ளது. என்றாலும் அவருக்கு விஷ எதிர்ப்பு ஊசி செலுத்தப்பட்டு சில மணி நேரம் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதை யடுத்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். அதனால் நாளை நடைபெறும் தனது பிறந்தநாள் நிகழ்ச்சியில் வழக்கம்போல் சல்மான்கான் பங்கேற்பார் என்று தெரியவந்துள்ளது.