ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

பாகுபலிக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி உள்ள பிரமாண்ட படம் ஆர்ஆர்ஆர். ராம் சரண், ஜூனியர் என்டிஆருடன் பாலிவுட் நடிகை ஆலியாபட், அஜய் தேவ்கன் ஆகியோரும் நடித்துள்ளனர். தென்னிந்தியாவில் நிறைய நடிகைகள் இருக்கும்போது வட இந்தியாவில் இருந்து ஆலியாபட்டை அழைத்து வந்தது ஏன் என்று ராஜமவுலி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: ஆர்ஆர்ஆர் படத்தில் நீரும், நெருப்பும் தான் பிரதானம். நீர் ராம் சரண், என்றால் நெருப்பு ஜூனியர் என்டிஆர். இந்த இரண்டையும் கட்டுப்படுத்த ஒரு சக்தி வேண்டும். அதுதான் ஆலியா. வெளியில் மென்மையாகவும், உள்ளுக்குள் வலிமையாகவும் இருக்கும் ஒரு கேரக்டருக்கு அவர் தான் பொருத்தமானவர் என்று முடிவு செய்தேன்.
அதற்கு காரணம் அவர் நடித்த ராஸி படம். அந்த படத்தை பார்த்த பிறகு சீதா கேரக்டருக்கு ஆலியா பொருத்தமானவராக உணர்ந்தேன். எனது படத்தில் நடிக்க ஆர்வமாக ஆலியா இருந்தது தெரியும். ஆனால் ஒரு சிறப்பு கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்ற தயக்கம் இருந்தது. கதை கேட்ட உடன் நடிக்க ஒப்புக் கொண்டார் என்றார்.
ராஸி படத்தில் ஆலியாபட் இந்தியாவுக்காக வேவு பார்க்க பாகிஸ்தான் தீவிரவாத கூட்டத்துக்கு அனுப்பப்படும் துணிச்சல்மிக்க பெண்ணாக நடித்திருந்தார்.