600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பவன் கல்யாண் நடிக்கும் தெலுங்கு படம் ஹரி ஹர வீரமல்லு. இந்த படத்தை கிரிஷ் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக நடிக்க பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒப்பந்தமாகி இருந்தார். இன்னொரு ஹீரோயினாக நிதி அகர்வால் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்குவதாக இருந்தது.
ஆனால் தற்போது ஜாக்குலினை அதிரடியாக படத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். இந்தியாவின் பிரபல மோசடி மன்னன் சுகேஷின் மோசடி வழக்கிற்குள் ஜாக்குலின் சிக்கி இருப்பதால், அவர் எந்த நேரம் வேண்டுமானாலும் போலீசால் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு பாதிக்கும் என்பதால் அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டனர். இப்போது அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.