டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரினா கைப், நடிகரான விக்கி கவுசல் இருவரும் வரும் டிசம்பர் 9ம் தேதி ராஜஸ்தானில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள். தனியார் ரிசார்ட் ஒன்றில் அவர்களது திருமணம் மூன்று நாள் கொண்டாட்டமாக நடைபெற உள்ளது. இவர்களது திருமணத்திற்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளார்களாம்.
ஆனால், திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்களாம். திருமணம் நடைபெற உள் இடத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் பிறகு மொபைல் போன்களை எடுத்து வர அனுமதி இல்லையாம்.
மேலும், திருமண நிகழ்வுகள் பற்றி கலந்து கொள்பவர்கள் எந்த ஒரு பதிவையும் சமூக வலைத்தளங்களில் கத்ரினா, விக்கி ஆகியோரின் முன் அனுமதி இல்லாமல் பதிவிடக் கூடாதாம். ஏன் இவ்வளவு கட்டுப்பாடுகள் என பாலிவுட் வட்டாரத்தில் இது பற்றித்தான் தற்போது பேசிக் கொள்கிறார்களாம்.