மைசூரில் பிலிம் சிட்டி: கர்நாடக முதல்வர் அறிவிப்பு | 'ஊர் பூரா டாஸ்மாக்கை திறந்து வச்சிட்டு குடிக்கிறவனை தப்பு சொல்வதா?': பாட்டல் ராதா படத்தின் டீசர் வெளியானது! | ‛தீரன் அதிகாரம் இரண்டு' : மீண்டும் கார்த்தி - வினோத் கூட்டணி | ரூ.100 கோடி வசூலை நெருங்கியதா 'மகாராஜா'? | விதி விளையாடிவிட்டது : தர்ஷன் பற்றி மனம் திறந்த சிவராஜ்குமார் | நாகேஷ் - சிவகார்த்திகேயன் பாணியில் கதாநாயகனாக அறிமுகமாகும் பிக்பாஸ் ராஜூ | பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்திக் | ரூ.3 லட்சத்திற்கு ஏலம்போன மம்முட்டி எடுத்த புகைப்படம் | சத்ருகன் சின்ஹா மருத்துவமனையில் அனுமதி | தொடர்ந்து அவதூறு பரப்புகிறார் : சுசித்ரா மீது கார்த்திக் குமார் நீதிமன்றத்தில் புகார் |
வாசனை காமெடியன் பல ஆண்டுகளாக, 'ஹீரோ'வாக நடித்த போதும், இன்னும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால், புரோட்டா காமெடியனோ, இரண்டே படங்களில், 'ஹீரோ' மார்க்கெட்டை, 'ஸ்டெடி' பண்ணி விட்டார்.
இதனால், கடும் அதிர்ச்சியில் இருக்கும், வாசனை காமெடியன், இனிமேல், காமெடி கலந்த கதைகளில் நடிப்பதை தவிர்த்து, கருத்து சொல்லும் படங்களில் நடிக்க விரும்புகிறார்.
ஆனால், அவரது இந்த முடிவை பார்த்து, 'காமெடி, 'ஹீரோ'வான நீங்கள், கருத்து சொன்னால், அதை ரசிகர்கள் ஏற்பரா?' என, கேள்வி எழுப்பினர், சில இயக்குனர்கள்.
'புரோட்டா காமெடியன் சொல்லும் போது ஏற்கும், ரசிகர்கள், நான் சொல்லும் போது, ஏற்க மாட்டார்களா? நல்ல விஷயங்களை யார் சொன்னாலும், தமிழக ரசிகர்கள் ஏற்றுக் கொள்வர். எனக்கும், சமூகத்தை சீர்திருத்தக் கூடிய கதைகளை தயார் செய்யுங்கள்...' என, நட்பு வட்டார இயக்குனர்களை வலியுறுத்தி வருகிறார், வாசனை காமெடியன்.