தமிழில் இடைவெளி இல்லை: பிரியங்கா மோகன் | அம்மா மாதிரி வருவேன்: குஷ்பு மகள் நம்பிக்கை | 'ப்ரோ கோட்' டைட்டில் வழக்கை வாபஸ் பெற்றார் ரவி மோகன் | பிளாஷ்பேக்: தஞ்சை சிறையில் தயாரான படம் | பிளாஷ்பேக்: ஓட்டல் நடத்திய முதல் நடிகர் | 'தாய் கிழவி'யைப் பார்க்க பெண்கள் வருவார்களா? | பிளாஷ்பேக்: ஆர் எம் வீரப்பனால் இயக்குநர் என்ற இலக்கை எட்டிப்பிடித்த ஏ ஜகந்நாதன் | 'கேஜிஎப் 2' டீசர் 279 மில்லியன் : 'டாக்சிக் டீசர் 100 மில்லியனாவது கடக்குமா ? | 8 வார ஓடிடி இடைவெளி; தெலுங்கு திரையுலகம் ஆலோசனை | ‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' |

தமிழ் சினிமா பின்னணி பாடகிகளில் புதிய அறிமுகம் அமீனா ரபீக். இசை குடும்பத்தில் இருந்து வந்தவர். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் சகோதரி மகளான இவர் முதல் முறையாக மதுரையில் இசைக் கச்சேரி நடத்தினார்.
இதற்காக வந்தவர் தினமலர் சண்டே ஸ்பெலுக்காக நம்மிடம் பேசியது...
மதுரை மக்களின் அன்பு மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்; ஆனால், 'அமீனா ரபீக்' என என் பெயரில் நடந்த முதல் மேடை நிகழ்ச்சி இது. மதுரைக்காக, நம்ம தமிழ் மக்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்தியது மகிழ்ச்சி.
முதல்முறையாக மதுரைக்கு வந்துள்ளேன். நான் ஒரு சாப்பாட்டு பிரியை, வந்த உடனே மட்டன் பிரியாணி, பரோட்டா, கோலா உருண்டை என ஒரு புடி புடிச்சேன். மதுரைன்னாலே சாப்பாட்டிற்கு பஞ்சமில்லை. இதற்காகவே மீண்டும் மீண்டும் மதுரைக்கு வருவேன்.
மதுரையில் இசை நிகழ்ச்சி நடத்துகிறேன் என்று சொன்னதும் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்தினார். எனக்கு எல்லாமும் அம்மா தான். நான் பாட, இசையில் இருக்க, நான் பண்ணும் ஒவ்வொரு விஷயத்திலும் அவர் தான் உள்ளார். ''காந்தி டாக்ஸ்'' படத்தில் 'ஏதோ ஏதோ' என்ற பாடலை ரஹ்மானின் இசையில் பாடினேன். அண்ணன் ஏ.எச். காஷிப்பும் இசையமைப்பாளர் தான், அவரது கம்போசிங்கிலும் பாடுகிறேன்.
எல்லா இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடணும் என்று தான் ஆசை. ஜி.வி.பிரகாஷ் இசைக்கு என் வாய்ஸ் 'செட்' ஆனால் நிச்சயம் கூப்பிடுவார். என்னை எப்போதும் ஊக்கப்படுத்துபவரும் அவர் தான். எனக்கு இசையமைக்க ஆசை உள்ளது. விரைவில் ஆல்பம் ஒன்றுக்கு இசையமைக்கப் போகிறேன். விருது வாங்கும் ஆசை உள்ளது. அதற்காக உழைத்து என்னை தயார்படுத்துவேன்.
முத்த மழை பாடல் ரெக்கார்டிங்கில் நான் கோரஸ் பாடி, கேட்டபோதே இந்த பாடல் நிச்சயம் ஹிட் அடிக்கும் என நினைத்தேன். எதிர்பார்த்தது போலவே நடந்தது. அந்த பாடலுக்கு பின் எனக்கு கிடைத்த வரவேற்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
நான் பாடும்போது ஸ்டைல் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். அது தான் எனது சிறப்பு என நினைக்கிறேன்.
எனக்கு தெரிந்தது எல்லாம் இசை, பாட்டு மட்டுமே. நடிக்கும் ஆசையெல்லாம் கிடையாது.
மெலடி என்றைக்கும் குறையாது, அதற்கான பாடல்கள் வந்து கொண்டே தான் இருக்கும். நான் ரொமான்டிக்கான ஆள். சோக பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் . நான் ஆல்பம் போட்டால் அந்த மாதிரி ஹார்ட் பிரேக்கிங் பாடல்கள் தருவேன். எனக்கு எந்த ஹார்ட் பிரேக்கிங்கும் இல்லை என சொல்லிக் கொள்கிறேன்.
இவ்வாறு அமீனா தெரிவித்தார்.