'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
தொலைக்காட்சி செய்தி வாசிப்பளரான சரண்யா, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது (2015) என்ற படத்தின் மூலம் திரையில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஆயுத எழுத்து' தொடரின் மூலம் சின்னத்திரையிலும் நுழைந்தார். இவர் கடைசியாக நடித்து வந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' தொடர் திடீரென நிறுத்தப்பட்டது. அதன்பிறகு திரையில் தோன்றாத சரண்யா சரியான வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்.
அதேசமயம் சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் சரண்யா படு சுட்டியாக போஸ்டுகளை போட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். அந்த வகையில் தனது பழைய போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஆறு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் மராத்தி பெண் போல் உடையணிந்திருக்கும் சரண்யா, மீனவர் துறைமுகத்தில் படகுகளுக்கு நடுவே தேவதை போல் அமர்ந்திருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.