'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

'கோகுலத்தில் சீதை' சீரியலில் கதாநாயகி ஆஷா கவுடா ஷூட்டிங்கில் பங்கேற்காததால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதனையடுத்து அந்த சீரியல் ஒருவாரத்திற்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும்'கோகுலத்தில் சீதை' என்கிற சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நாயகனாக நந்தா மாஸ்டரும், நாயகியாக ஆஷா கவுடாவும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தொடங்கிய இந்த தொடரில் கூடுதல் வலுசேர்க்கும் வகையில் குஷ்புவும் இணைந்து நடிக்க தொடங்கினார்.
இந்நிலையில், இந்த சீரியல் ஒரு வார காலத்திற்கு நிறுத்தபடுவதாக செய்தி வெளியாகியுள்ளது. நாயகியாக நடிக்கும் ஆஷா கவுடாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் படபிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. எபிசோடுகளுக்கான ஷூட்டிங்கும் முடிவு பெறாத காரணத்தால் ஒரு வார காலத்திற்கு இந்த சீரியல் நிறுத்தப்படுவதாக ஜீ தமிழ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் நடிகை ஆஷா கவுடாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியானது. ஆனால், அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என டிவி தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டது.




