எல்லா படங்களுக்கும் கதாநாயகி அவசியம் இல்லை : நிகிலா விமல் | ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட பிரபாஸ் | மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு : அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை | இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் | ஆவேசம் பஹத் பாசில் பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த விஸ்வக் சென் | சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே | புஷ்பா 2 வில் இருந்து விலகிய எடிட்டர் ஆண்டனி ரூபன் ? | ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் பஹத் பாசில் படம் அறிவிப்பு | கரகாட்டக்காரன் 2 வருமா - ராமராஜன் பதில் |
ரசிகர்கள் கொண்டாட்டம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவுக்கு பின் நடித்து வந்தார் காவ்யா அறிவுமணி. அதன்பின் சில படங்களில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்ததால் சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில், அவர் தற்போது ஹீரோயினாக புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் ஹீரோயின் கார்வன் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு, 'வாழ்க்கையில் மிகவும் காத்திருந்த தருணம் இப்போது நடக்கிறது. நடுத்தர குடும்பத்திலிருந்து எந்தவொரு பின்புலமும் இல்லாமல் நடிகையாக குறும்படங்கள், சீரியலில் நடித்து தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடிக்கிறேன்' என மிகவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். காவ்யா அறிவுமணியின் இந்த புதிய பயணம் வெற்றி பெற ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.