அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு |
சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா பிரசவத்தின் காரணமாக ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகினார். அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள ஆல்யா தனது இரண்டு குழந்தைகளுடனும் ஜாலியாக நாட்களை கழித்து வருகிறார். இதற்கிடையில் பலரும் ஆல்யா மீண்டும் சீரியலில் நடிப்பரா? எப்போது சின்னத்திரையில் வருவார்? என அடிக்கடி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். முன்னதாக இதற்கு பதிலளித்த ஆல்யா, தான் இப்போது குழந்தை வளர்ப்பதில் ஜாலியாக இருப்பதாகவும் விரைவில் பிட்னஸ் மற்றும் இதர விஷயங்களை சரிசெய்து நடிக்க வருவேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், அண்மையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ரசிகர் ஒருவர் 'நீங்கள் எந்த சேனலில் நடிக்கப்போகிறீர்கள்?' என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பதில் கூறும் ஆல்யா, 'நான் நான்கு கதைகளை கேட்டிருக்கிறேன். அதில் இரண்டு பிடித்திருக்கிறது. எந்த சேனல் என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். கண்டிப்பாக நீங்கள் சந்தோஷப்படும் சேனலில் தான் நடிப்பேன்' என்று கூறியுள்ளார். மேலும், இன்னும் இரண்டே மாதங்களில் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுப்பேன் என்றும் கூறி உள்ளார். ஆல்யா மானசாவை மீண்டும் திரையில் பார்க்க போவதால் மகிழ்ச்சியடைந்துள்ள ரசிகர்கள் இப்போதே அவரது ரீ- என்ட்ரியை கொண்டாடி வருகின்றனர்.