'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

காதல் கணவரும், நடிகருமான நாகசைதன்யாவுடன் தனது திருமணம் முறிவை சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சமந்தா. அதற்கு பல்வேறு விதமான கருத்துக்கள் விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வருகின்றன. குறிப்பாக சமந்தா பக்கமே தவறு இருப்பது போல பலரும் குற்றம் சாட்டி பதிவுகளை இட்டு வருகின்றனர். சமீப நாட்களாக சோஷியல் மீடியாவில் மீண்டும் ஆக்டிவாக செயல்பட துவங்கியுள்ள சமந்தா, இந்த விமர்சனங்கள் குறித்து ஒரு பரிதா என்கிற எழுத்தாளர் ஒருவரின் கருத்தை தனது பதிலாக பதிவிட்டுள்ளார்.
அதில், 'பெண்கள் செய்கின்ற விஷயமெல்லாம் இங்கே ஒழுக்கத்துக்கு உட்பட்டு கேள்வி கேட்கப்படும் என்பது மாறாத விஷயம் என்றால், ஆண்கள் செய்வது மட்டும் ஒழுக்கத்துக்கு உட்பட்டு கேள்வி கேட்கப்படுவதில்லையே ஏன்.? அப்படியானால் நமது சமூகத்தில் அடிப்படையிலேயே ஒழுக்கம் இல்லை” என கூறப்பட்டுள்ளது. பொதுவாக திருமண முறிவு என வரும்போது, அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்கிறபோது பெண்கள் தான் குற்றம் சாட்டப்படுகின்றனர் என்று கூறுவதற்கு சமந்தா பதிலடி கொடுப்பதாகவே இந்த பதிவு அமைந்துள்ளது.




