தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு |

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது 'கே.ஜி.எப்' புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது ஜூனியர் என்டிஆரின் 31வது படமாக உருவாகிறது. இப்படத்தை தற்காலிகமாக 'என்டிஆர் - நீல்' எனும் தலைப்பில் அழைக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். வில்லன் கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடிப்பதாக இருந்தது. ஆனால், டொவினோ தாமஸ் கால்ஷீட் ஒதுக்க முடியாமல் வெளியேறியதால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாலிவுட்டில் இளம் நாயகன் ஆன சாகித் கபூர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.




