ஜன. 30ல் திரைக்கு வரும் ‛தலைவர் தம்பி தலைமையில்' | 'பாபு, ஏய்' படங்களின் 'உல்டா' தான் 'பகவந்த் கேசரி', அதன் ரீமேக் தான் 'ஜனநாயகன்' | பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் | திரிஷ்யம் 3 ரிலீஸ் எப்போது : இயக்குனர் தகவல் | ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ஜனவரி 9ல் ரிலீஸ் | ரேஸின் போது அஜித்தை சந்தித்தது ஏன் : ஸ்ரீலீலா பதில் | ரிலீஸ் அறிவிக்கப்பட்ட தேதியில் தீர்ப்பு; 'ஜனநாயகன்' ஜன.9ல் வெளியாகுமா? | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி |

நடிகர் வடிவேலு நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது சுராஜ் இயக்கும் நாய்சேகர் படத்தில் நடிக்கப்போகிறார். இந்தபடத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் கூடிய சீக்கிரமே படப்பிடிப்புக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், வடிவேலுவை வைத்து ஐந்து படங்ளை லைகா நிறுவனம் தயாரிக்கயிருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது நலன்குமாரசாமியிடமும் வடிவேலுவிற்கு அந்நிறுவனம் கதை கேட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் சில இளவட்ட டைரக்டர்களும் வடிவேலுவிற்கேற்ற காமெடி கதைகளை சொல்லி வருகிறார்களாம்.
ஆக, நாய்சேகர் படத்தை அடுத்து சந்திரமுகி-2வில் நடிக்கயிருப்பதை ஏற்கனவே வடிவேலு உறுதிப்படுத்தி விட்ட நிலையில் அவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் குறித்த தகவல்களும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.