நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. இப்படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஒரு ஊரில் ரஜினியின் ரசிகர்கள் அண்ணாத்த பேனருக்கு முன்பு நடுரோட்டில் வைத்து ஆடு பலி கொடுத்து, அந்த ரத்தத்தை பேனர் மீது அபிஷேகம் செய்தனர் . இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழ்வேந்தன் என்ற வழக்கறிஞர் இதுகுறித்து டிஜிபி அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், சில தினங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தின் போஸ்டர் வெளியானபோது அவரது ரசிகர்கள் அண்ணாத்த படத்தின் போஸ்டர் முன்பு கொடூரமாக ஒரு ஆட்டை பலி கொடுத்து அந்த பேனருக்கு ரத்த அபிஷேகம் செய்துள்ளனர். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் பெண்கள், குழந்தைகள் செல்லும் நடுரோட்டில் நடைபெற்றுள்ளது. ஆனால் இதுகுறித்து நடிகர் ரஜினி இதுவரை எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. அவரது செயல்பாடு இதை ஆதரிப்பது போலவே உள்ளது.
கோயில்களில், கறிக்கடைகளில் ஆடு வெட்டுவதையே ஒதுக்குப்புறமாக வைத்து செய்து வருகிறார்கள். ஆனால் ஒரு நடிகரின் கட்-அவுட்டுக்கு இப்படி நடுரோட்டில் ஆட்டை பலி கொடுத்தது கொடூரமானது. அதனால் இந்த செயலை கண்டிக்காத ரஜினி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.