தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

சினிமாவில் சில முதல் விஷயங்கள் நிராசையாகிப் போகாமல் நிறைவேற வேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள். அப்படியான ஒரு முதல் கனவு 'இந்தியன் 2' படம் மூலம் இசையமைப்பாளர் அனிருத்திற்கு அமைந்தது. அந்தக் கனவு நனவானாலும், முழுவதுமாக நிறைவேறாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
ஷங்கர் இயக்கும் படத்திற்கு முதல் முறை இசை, கமல்ஹாசன் நடிக்கும் படத்திற்கு முதல் முறை இசை என 'இந்தியன் 2' பட வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தப் படத்தில் ஒப்பந்தமான பிறகு இரண்டு வருடங்களுக்கு முன்பு, அவர் அளித்த பேட்டி ஒன்றில், “இந்தியன் 2' படம் எனக்குக் கிடைத்ததும் மிக உற்சாகமாக இருந்தேன். எனது பள்ளி நாட்களில் இருந்தே நான் ஷங்கரின் பெரிய ரசிகன். அதோடு நான் கமல் சாருடனும் பணியாற்றியது இல்லை. மேலும், 'இந்தியன்' படம் அவர்களது மிகச் சிறந்த படம். எனது கனவு நனவானது. அவருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு நண்பனுடன், 25 வயதுடைய ஒரு இயக்குனருடன் பணியாற்றுவது போல இருக்கிறது,” என்றெல்லாம் பெரும் உற்சாகத்துடன் பேசியிருக்கிறார்.
'இந்தியன் 2' படம் முக்கால்வாசி முடிந்த நிலையில் மேற்கொண்டு வளராமல் இருப்பதில் தயாரிப்பாளருக்கு எந்த அளவிற்கு கவலையோ அந்த அளவிற்கு அனிருத்திற்கும் இருக்கும். தமிழ் சினிமாவின் இரண்டு பெரும் படைப்பாளிகளுடன் முதல் முதலில் இணைந்த படம் முடிந்து திரைக்கு வருவதில் தான் அவருடைய கனவிற்கும், உற்சாகத்திற்கும் ஒரு அர்த்தத்தைத் தரும்.
அனிருத்துக்காகவாவது ஷங்கர், 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுப்பாரா?.