நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! | பிப்ரவரி 2026 : வெளியான 22 படங்களில் எத்தனை வெற்றி? | கண்டிக்கும் நடிகர் மகன்; வார்னிங் கொடுத்த நடிகர் மகள் | திரைப்பயணத்தில் 2ம் அத்தியாயம் தொடக்கம்: தனுஷ் பேச்சு | ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன் | போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க இருந்து, பின் கைவிடப்பட்ட அவரது “உடன்பிறப்பு” திரைப்படம் |

நாயை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. சிபிராஜ் நடித்து, தயாரித்த நாய்கள் ஜாக்கிரதை வெற்றி பெற்றது. தற்போது நாயை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் அன்புள்ள கில்லி.
புதுமுகம் ராமலிங்கம் ஶ்ரீநாத் எழுதி, இயக்கியுள்ளார். மைத்ரேயா ராஜசேகர், துஷாரா விஜயன் மற்றும் சாந்தினி தமிழரசன் , மைம் கோபி, ஆஷிக், நாஞ்சில் விஜயன், இளவரசு, பூ ராமு, இந்துமதி, ஶ்ரீரஞ்சனி மற்றும் பேபி கீர்த்திகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றிய இயக்குனர் ராமலிங்கம் ஸ்ரீநாத் கூறியதாவது: மனிதனின் உற்ற தோழனாக இருந்து வருகிறது நாய். அது சாதாரண மிருகம் மட்டுமல்ல, அது வீட்டின் பாதுகாவலன். அனைவர் வீடுகளிலும் நாய் ஒரு குடும்ப உறுப்பினராக தான் இருக்கும். அதை யாரும் பிரித்து பார்க்க மாட்டார்கள்.
உலகம் முழுக்க நாயை உறவாகவே கொண்டாடி வருகிறார்கள். நாயுடான மனிதனின் இந்த அழகிய உறவை சொல்லும் படமாக இருக்கும். நாயை வைத்து எடுக்கப்பட்ட முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இது இருக்கும். என்றார்.