டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கொரோனா இரண்டாவது அலைக்கு தமிழகமும் அதிக பாதிப்பை சந்தி்த்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உதவிடும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் அளித்து வருகின்றனர். ரஜினி, அஜித், சூர்யா குடும்பத்தினர், விக்ரம், சிவகார்த்திகேயன், ஷங்கர், முருகதாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நிதி உதவி அளித்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் ஐசரி கணேஷ், தனது மனைவி ஆர்த்தி , மகள் பிரீத்தா ஆகியோருடன் முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது தங்கள் சார்பில் கொரோனா நிவாரணப் பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.




