லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கொரோனா இரண்டாவது அலைக்கு தமிழகமும் அதிக பாதிப்பை சந்தி்த்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உதவிடும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் அளித்து வருகின்றனர். ரஜினி, அஜித், சூர்யா குடும்பத்தினர், விக்ரம், சிவகார்த்திகேயன், ஷங்கர், முருகதாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நிதி உதவி அளித்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் ஐசரி கணேஷ், தனது மனைவி ஆர்த்தி , மகள் பிரீத்தா ஆகியோருடன் முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது தங்கள் சார்பில் கொரோனா நிவாரணப் பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.