சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
எங்கேயும் எப்போதும் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் சர்வானந்த்.. ஆனால் தமிழில் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தெலுங்கு திரையுலகில் மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வருகிறார் சர்வானந்த். அந்தவகையில் கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் இவர் நடித்த 'ஸ்ரீகரம்' என்கிற படம் வெளியானது.
இந்தப்படம் வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சன் நெக்ஸ்ட் ஒடிடி பிளாட்பார்மில் வெளியானபோதும் கூட வசூல் ரீதியான வரவேற்பை பெற்றதாம். ஆனாலும் தனக்கு தரப்பட வேண்டிய சம்பள பாக்கித்தொகையை மட்டும் தயாரிப்பாளர் தராமல் இழுத்தடிப்பதால் அவர்மீது சட்டரீதியாக வழக்கு தொடர்ந்திருக்கிறாராம் சர்வானந்த்.
ஸ்ரீகரம் படத்திற்காக சர்வானந்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு ரிலீசுக்கு முன்பே நான்கு கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு விட்டதாம். பட ரிலீசுக்கு பிறகு மீதி இரண்டு கோடியை தருவதாக சொன்னவர்கள் வெறும் 50 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளார்களாம். இதையடுத்து மீதி ஒன்றரை கோடியை தனக்கு செட்டில் செய்யுமாறு தயாரிப்பாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையில் இறங்கியுள்ளாராம் சர்வானந்த்